ஞாயிறு, 13 ஜூன், 2021

இந்துமதமும் சில கேள்விகளும்.

கேள்வி : முதலாம் நூற்றாண்டில் இந்துமதம் இருந்ததா??? இந்து என்ற பெயர் இருந்ததா???

பதில் : ஆம் முதலாம் நூற்றாண்டு என்ன? கிறிஸ்து பிறப்பிற்கு முன்பே தமிழகத்தில் இந்துமதமும் இருந்தது இந்து என்ற பெயரும் இருந்தது.

இந்து என்ற பெயருக்கு ஆதாரம் :

1. பைபிள் பழைய ஏற்பாடு எஸ்தர் 1:1


2. இன்றிலிருந்து  2500 ஆண்டுகளுக்கு முன்பு முதலாம் #டேரிஸ் என்ற அரசனின் காலத்தில் பாரத நாட்டின் ஆன்மீக தத்துவங்களை இந்து என்று அழைத்துள்ளனர்.


இந்து மதம் இருந்ததற்கு ஆதாரம் :

பொதுவாக இன்று இந்து என்ற பெயரில் சங்ககாலத்தில் இருந்த சிவன், திருமால், முருகன் போன்ற தெய்வங்களை வழிபடுபவர்களையே இந்துக்கள் என்று அழைப்பதால் கிறிஸ்து பிறப்பிற்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட சங்க இலக்கியமான புறநானூற்றில் இந்த தெய்வங்கள் பற்றிய குறிப்புகள் உண்டு என்பதால் இந்துமதம் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே இன்றைய தமிழக நிலப்பரப்பில் இருந்தது...!

நூல் : புறநானூறு
பாடியவர்: மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்.
பாடப்பட்டோன்: பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்.

"ஏற்றுவலன் உயரிய எரிமருள் அவிர்சடை மாற்றருங் கணிச்சி மணிமிடற் றோனும், கடல்வளர் புரிவளை புரையும் மேனி அடல்வெந் நாஞ்சில் பனைக்கொடி யோனும்,

மண்ணுறு திருமணி புரையும் மேனி
விண்ணுயர் புள்கொடி விறல்வெய் யோனும் மணிமயில் உயரிய மாறா வென்றிப் பிணிமுக ஊர்தி ஒண்செய் யோனும்என ஞாலம் காக்கும் கால முன்பின்,

தோலா நல்இசை நால்வர் உள்ளும்
கூற்றுஒத் தீயே மாற்றருஞ் சீற்றம்;
வலிஒத் தீயே வாலி யோனைப்;
புகழ்ஒத் தீயே இகழுநர் அடுநனை;
முருகுஒத் தீயே முன்னியது முடித்தலின்; ஆங்குஆங்கு அவரவர் ஒத்தலின் யாங்கும்
அரியவும் உளவோ நினக்கே?"

பொருள் : காளைக்கொடியை வெற்றியின் அடையாளமாக உயர்த்திப் பிடித்து, 
நெருப்புப் போல் ஒளிவிடும் சடையோடும், ஒப்பற்ற கணிச்சி என்னும் ஆயுதத்தோடும், 
நீலநிறக் கழுத்தோடும் காட்சி அளிப்பவன் #சிவபெருமான். கடலில் வளரும் முறுக்கிய சங்கு போன்ற வெண்ணிற மேனியும், 
கொல்லுதலை விரும்பும் கலப்பையும், பனைக்கொடியும் உடையவன் பலராமன்

கழுவப்பட்ட அழகிய நீலமணி போன்ற உடலும், வானளாவ உயர்ந்த கருடக் கொடியும் கொண்டு வெற்றியை விரும்புபவன் திருமால். நீலமணி போன்ற நிறத்தையுடைய மயிற்கொடியும், உறுதியான வெற்றியும், மயிலை ஊர்தியாகவும் (வாகனமாகவும்) கொண்ட ஓளிபொருந்தியவன் முருகன்

இந்நான்கு கடவுளரும் உலகம் காக்கும் வலிமையும் அழியாத புகழும் உடையவர்கள். 
இந்த நால்வருள்ளும், உன்னுடைய நீங்காத சினத்தால் நீ அழிக்கும் கடவுளாகிய சிவனுக்கு ஒப்பானவன்; 
வலிமையில் பலராமனுக்கு ஒப்பானவன்; புகழில் பகைவரைக் கொல்லும் திருமாலுக்கு ஒப்பானவன்; 
நினைப்பதை முடிப்பதில் முருகனுக்கு ஒப்பானவன். 

இவ்வாறு ஆங்காங்கு அந்த அந்தக் கடவுளை ஒத்தவனாக இருப்பதால், உன்னால் செய்ய முடியாத செயலும் உண்டோ?  என்று பாண்டியனுக்கு அக்காலத்தில் இருந்த தெய்வங்களின் பெருமைகளை உவமையாக்குகிறார் புலவர்.

 -பா #இந்துவன்
  24.05.2021

தமிழர்களின் பண்பாட்டில் திருமணத்தின்போது தாலி அடையாளச் சின்னமாக இருந்ததா???

பழந்தமிழர் பண்பாட்டில் திருமணத்தின்போது தாலி அணியும் வழக்கம் இருந்ததா? ஆரம்ப காலத்தில் ஆண்களும் பெண்களும் பருவம் அடைந்தபின் விலங்குகளையும் ப...