சனி, 22 மே, 2021

சதி எனும் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை அறிமுகப்படுத்தியது யார்?

நண்பர் - 1 : இந்துமதத்தில்  இருந்த "சதி" எனும் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை ஒழிக்க ராஜாராம் மோகன் ராய் பாடுபட்டார் சகோ.

நண்பர் - 2 : அப்போ ராமசாமி நாயக்கர் ஒழிச்சதா சொன்னாங்க? ஏன் ராஜாராம் மோகன் ராய் ஒழிச்ச சதியை திரும்ப ராம்சாமி நாயக்கர் ஒழிச்சார்???

நண்பர் -1 : அது வந்து😓🤔 பார்ப்பனர்கள் திரும்பவும் இந்த உடன்கட்டை ஏறும் வழக்கத்தை புகுத்தினார்கள் அதனால்தான் திரும்ப ஒழித்தார் சகோ.

நண்பர் -2 : இராஜாராம் மோகன்ராயே இந்து புராண இதிகாசங்கள் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை ஏற்கவில்லை என்று பல மேற்கோள்களை காட்டிதான் அதை எதிர்த்தார் எனும்போது பார்ப்பனர்கள் திரும்ப எப்படி புகுத்தியிருப்பார்கள்.???

நண்பர் - 1 : அது வந்து ப்ரோ இந்த ஆரியர்கள் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை தமிழர்களிடம் புகுத்தியதே தமிழர்களின் கலாச்சாரத்தை அழிக்கதான் சகோ. சதிக்கு ஆதரவாக பல சமஸ்கிருத நூல்கள் உள்ளதை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை சகோ.

நண்பர் - 2 : எனில் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை அறிமுகப்படுத்தி அதை முதன்முதலில் வழக்கமாக கொண்டிருந்தது ஆரியர்கள்தான் அல்லவா???

நண்பர் -1 : அதில் என்ன சந்தேகம் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை உருவாக்கியதே ஆரியர்கள் தான்.

நண்பர் - 2 : சரி. தமிழின் மிகப்பழமையான நூலான தொல்காப்பியத்தின் காலம் என்னவாக இருக்கும்னு நினைக்கிறீங்க???

நண்பர் - 1 : அது ஆரியர்கள் வருகைக்கு முன்பானது சகோ. ஆரியம் கலக்காத ஒரே நூல் தொல்காப்பியம் தான்.

நண்பர் - 2 : எனில் தொல்காப்பியத்தில் எப்படி உடன்கட்டை ஏறும் வழக்கம் வந்தது??? ஆரியர்கள் டைம் மெஷின் வச்சு தொல்காப்பியர் காலத்துக்கு வந்துட்டு உடன்கட்டை ஏறும் வழக்கத்தை தொல்காப்பியருக்கு சொல்லி கொடுத்துட்டு போனாங்களா???

நண்பர் - 1 : எதே 😳😳😳 தொல்காப்பியத்தில் உடன்கட்டை ஏறும் வழக்கம் இருந்ததாக குறிப்புகள் உள்ளதா??? பாத்தியா.! நீ என்னையே முட்டாளாக்க பார்க்கிறாய்? தமிழர்களுக்கும் உடன்கட்டை ஏறும் வழக்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை சகோ.

நண்பர் - 2 : ஒருவேளை தொல்காப்பியத்தில் உடன்கட்டை ஏறும் வழக்கம் இருந்தால் இந்த உடன்கட்டை ஏறும் வழக்கத்தை தமிழர்கள் தான் ஆரியர்களுக்கு கற்றுக்கொடுத்தனர் என்பதை ஒத்துப்பீங்களா???

நண்பர் -1 : இல்லாத ஒன்றை பற்றி ஏன் பேசுறீங்க சகோ? தொல்காப்பியத்தில் உடன்கட்டை ஏறும் வழக்கம் பற்றிய குறிப்புகள் இல்லை. இருந்தால் ஆதாரம் தாருங்கள்.

நண்பர் - 2 : (தொல்காப்பியம், சூத்திரம் –1025)

காதலி இழந்த தபுதார நிலையும்
காதலன் இழந்த தாபத நிலையும்
நல்லோள் கணவனொடு நனியழல் புகீஇச் சொல்லிடைஇட்ட பாலை நிலையும்"

அதாவது இங்கு தொல்காப்பியர் சொல்வது என்னவெனில் கணவனின் இறந்த உடலுடன் கூடவே எரியுண்டால் அவள் சமுதாயத்தில் முழுமையான நல்லபெண் ஆகிவிடுகிறாள். இதில், ‘நல்லோள்’ என்னும் சொல் கணவனுடன் எரிபுகும் பெண்ணைக் குறிக்கக் கையாளப்படிருக்கிறது.

நண்பர் - 2 : சகோ இருக்கீங்களா?

நண்பர் - 1 : 😷🏃🏃🏃

நண்பர் - 2 : இப்போ சொல்லுங்க சகோ சதி எனும் உடன்கட்டை ஏறும் வழக்கம் இந்துமதத்தில் இருந்ததா? இல்லை😒😒😒??? ஒருவேளை இதற்கு பதில் சொன்னால் தொல்காப்பியன் ஓர் இந்து என்பதை ஏற்க வேண்டி வரும்...!

நண்பர் - 1 : 😳😷🏃🏃🏃

வழக்கம்போல இவரும் ஓடிவிட்டார். இன்னும் கொஞ்சநேரம் இருந்திருந்தால் புறநானூறு, புறப்பொருள் வெண்பா மாலை, மணிமேகலை என்று தமிழக நிலப்பரப்பில் உடன்கட்டை ஏறும் வழக்கம் இருந்தது பற்றிய ஏராளமான தகவல்களை கொடுத்திருக்கலாம். பொதுவாக உடன்கட்டை ஏறும் வழக்கம் பாரத நிலப்பரப்பில் கட்டாயப்படுத்தப்பட்ட சட்டமில்லை என்பதற்கு உதாரணம் பாரதத்தின் மிகப் பழமையான இரு இதிகாசங்களாகும். மகாபாரதத்தில் பாண்டு இறந்த பிறகு குந்தி உயிரோடிருந்து தனது ஐந்து (கர்ணன் தவிர்த்து) புதல்வர்களை நல்முறையில் வளர்த்தியதை படித்திருப்போம். அதுபோல இராமாயணத்திலும் தசரதன் இறந்தபிறகு கைகேயி முதலான மனைவியர் தீப்புகாதிருந்ததே இதற்கு ஆகச்சிறந்த உதாரணமாகும்...!

தமிழ் இலக்கியங்களை எடுத்துக்கொண்டாலும் இது கட்டாயப் படுத்தப்பட்ட சட்டமாக இருந்ததில்லை எனவும் பெண்கள் இம்முடிவை தாமாக முன்வந்து எடுத்துள்ளனர் என்பதையும் அறியலாம். உதாரணமாக,

புறநானூறு :

"பல் சான்றீரே! பல் சான்றீரே!
‘செல்க’ எனச் செல்லாது, ‘ஒழிக’ என விலக்கும், பொல்லாச் சூழ்ச்சிப் பல் சான்றீரே! அணில்வரிக் கொடுங்காய் வாள் போழ்ந்திட்ட காழ் போல் நல் விளர் நறு நெய் தீண்டாது அடை இடைக் கிடந்த கை பிழி பிண்டம்,
வெள் எள் சாந்தொடு, புளிப்பெய்து அட்ட வேளை வெந்தை, வல்சி ஆக,
பரற்பெய் பள்ளிப்பாயின்று வதியும்
உயவற் பெண்டிரேம் அல்லேம் மாதோ; பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம் நுமக்கு அரிதாகுக தில்ல; எமக்கு எம் பெருந்தோட் கணவன் மாய்ந்தென, அரும்பு அற
வள் இதழ் அவிழ்த்த தாமரை
நள் இரும் பொய்கையும் தீயும் ஓரற்றே"

பொருள்: ‘’கணவனுடன் நீயும் போ என்று சொல்லாமல் பொல்லாத செயல் புரியும் பெரியோர்களே! கணவன் இல்லாத பெண்கள் வெள்ளரிக்காய் விதை போல, நெய் இல்லாத சோறு, எள்ளுத் துவையல், புளி கூட்டி சமைத்த வேள இலை ஆகியவற்றை உண்ண வேண்டும். பாய் இல்லாமல் வெறும் கல் தரையில் படுக்க வேண்டும். அது போன்ற பெண் என்று என்னை நினைத்து விட்டீர்களா? நான் அப்படிப்பட்டவள் அல்ல. உங்களுக்கு வேண்டுமானால் மரணப் படுக்கை கஷ்டமாக இருக்கலாம். என் கணவன் இறந்துவிட்டான். அந்த சிதைத் தீயே எனக்கு தாமரைக்குளம் போல குளிர்ச்சிதரும். இதைப் புரிந்துகொள்ளுங்கள் என்று அவையில் குழுமியிருந்த பெரியோர்களின் அறிவுரைகளை கேட்காமல் தாமாக முன்வந்து பூதப்பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு தீப்புகுகிறாள். இதிலிருந்து உடன்கட்டை ஏறும் வழக்கம் நமது தமிழ் சமூகத்தில் கட்டாயப்படுத்தப்டவில்லை என்பது தெளிவு...!

தொல்காப்பியம் முதற்கொண்டு தமிழின் மிகப்பழமையான இலக்கியங்களே உடன்கட்டை ஏறும் வழக்கத்தை முன்மொழிவதால் இது ஆரியர்கள் தமிழர்களிடம் புகுத்தியது என்றோ, பார்ப்பனர்களின் சூழ்ச்சி என்றோ சொல்வதற்கு இடமில்லை எனினும் இதுபோன்றதொரு கொடுமையான நிகழ்வை ஏற்றுதான் ஆகவேண்டுமா என்றால் நிச்சையமாக இல்லை. ஒருவேளை வள்ளுவன் கூறியதுபோல்

"தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை"

பொருள் : பிற தெய்வங்களைத் தொழாமல் கணவனையே தெய்வமாகத் தொழுது வாழும் மனைவி, பெய் என்று சொன்னால் மழை பெய்யும்.

கற்பு தவறாமல் தன் கணவனை தெய்வத்திற்கு நிகராக மதித்து வாழ்ந்த இத்தகைய மகத்துவம் வாய்ந்த பெண்கள் தன் கணவன்மீது கொண்ட அன்பால் கணவனை இழக்கும்போது துன்பம் தாங்க முடியாமல் இதுபோன்றதொரு செயலை செய்ய முற்பட்டிருப்பார்களோ? என்றால் கூட அந்நிகழ்வை நினைவுபடுத்தவே முடியவில்லை. ஏனெனில் அந்நிகழ்வு அத்தனை கொடுமையானது. நமது இந்த பாரத திருநாட்டில் குழந்தைத்திருமணம் முதற்கொண்டு இதுபோன்ற மூடப்பழக்கவழக்கங்களை காலத்திற்கு ஏற்ப மாற்றி அமைத்து தன்னைத்தானே தனது குறைகளை அகற்றி இன்று ஆலமரம்போல் வளர்ந்து நிற்கிறது இந்நாட்டின் பண்பாட்டு கலாச்சாரங்கள்...!

தீப்பாய்ந்த அம்மன், மாலையிட்ட அம்மன் என்று கணவனுடன் தீப்பாய்ந்து உயிர்நீத்த பெண்களுக்கு நடுகல் எழுப்பி வழிபடும் வழக்கமும் நம்மிடம் இருந்தது. இந்த நடுகற்களில் கணவனைப் பிரியாதாள், துணைவனைப் பிரியாதாள் என்பதுபோன்ற வசனங்கள் பொறிக்கப்பட்டிருப்பதை இன்றும் காணலாம். கணவனோடு சுமங்கலியாகச் சொர்க்கம் புகுதல் மற்றும் கற்பு நெறி தவறாத இத்தகைய பெண்களுக்கு நடுகல் எழுப்பி  தெய்வமாக  வழிபடுதல் ஆகிய நம்பிக்கைகளின்  அடிப்படையில் உடன்கட்டை ஏறும் வழக்கம் நடைமுறையில் இருந்துள்ளது எனினும் இது இன்றைய சூழலில் தேவையற்ற ஒன்றே ஆகும்...!

 -பா #இந்துவன்
  22.05.2021

சமஸ்கிருதம் சில கேள்விகள்

சமஸ்கிருதமும் சில கேள்விகளும் :

சிறிது நாட்களுக்கு முன்னர் நண்பர் ஒருவருக்கும் எனக்கும் நடந்த சிறு விவாதத்தின் ஒரு பகுதியை கீழே காண்போம்.

(அதை தற்கால சூழலுக்கு ஏற்ப சுப்பு அவர்களின் எழுத்துகளையும் இணைத்து பதிகிறேன்)

நண்பர் : உங்கள் கடவுளுக்கு தமிழ் தெரியாதா? ஏன் தமிழில் பூஜை செய்ய கூடாது?

இந்துவன் : கடவுளுக்கு மொழிகள் கிடையாது. இந்த மொழிதான் எனக்கு உகந்தது மற்றவைகள் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று இறைவன் எந்த இடத்திலும் யாரிடமும் கூறியதாக சரித்திர சான்றுகளும் இல்லை. புராண, இதிகாச ஆதாரங்களும் இல்லை. இறைவனை வழிபடும் போது தமிழ் மொழியிலும் வழிபடலாம். சமஸ்கிருதத்திலும் வழிபடலாம். இதுவரை எழுத்து வடிவமே இல்லாத நரிக்குறவர் பாஷையிலும் வழிபாடு நடத்தலாம். இறைவன் அதை ஒரு போதும் ஏற்காமல் விலக்கி வைப்பது கிடையாது.

இதை சாதாரணமாக முகநூலிலே உட்கார்ந்து கதை பேசும் உங்களாலும், என்னாலும் அறிந்து கொள்ள முடிகிறது என்றால் கோடிக்கணக்கான பொற் காசுகளை கொட்டி ஆலயங்களை உருவாக்கினார்களே மன்னாதி மன்னர்கள் அவர்களால் எப்படி அறிந்து கொள்ளாமல் போக முடிந்தது?  நமது மன்னர்கள் என்ன முழு முட்டாள்களா? வேற்று நாட்டை வெல்வதற்கு படை திரட்ட தெரிந்த அவர்களுக்கு, உலகத்தை வெல்ல கனவு கண்டு, கடல் கடந்து கப்பல் ஒட்டி, வெற்றி பயணம் மேற்கொண்ட அவர்களுக்கு தமிழில் வழிபாடு நடத்தினால் இறைவன் ஆத்திரப்படமாட்டான் என்ற இரகசியம் எப்படி தெரியாமல் போயிற்று? ஏன் இதை நீங்கள் சிந்திக்கவில்லை?

நண்பர் : சமஸ்கிருதத்தில் இதுவரை ஒரு இலக்கியமும் எழுதப்படவில்லையே?ஒருவேளை  யாராவது எழுதி இருந்தால் எழுதப்பட்ட இலக்கியங்களின் பெயர்கள் என்னென்ன? 

இந்துவன் : வேதங்கள், உபநிடதங்கள், ராமாயணம், மாஹாபாரதம்,  ஹரிவம்சம், ஐந்திர வியாகரணம், அஷ்ட்டாத்யாயி, கௌதம தர்ம சூத்திரம், மற்றும் புராணங்கள் என்று அதிகமாக உள்ளது.

நண்பர் : தமிழ் புலவர்கள் யாராவது சமஸ்கிருத நூல்கள் எழுதியுள்ளனரா ?

இந்துவன் : ஆம். வடமொழியில் காவ்யாதர்சம் எழுதிய அறிஞர் தமிழ்நாட்டுக் காஞ்சிபுரத்தைச் சார்ந்த #தண்டி என்ற தமிழர். முதன் முதலில் தமிழுக்கு இலக்கண நூல் எழுதிய தொல்காப்பியருக்கு குருவாம் அகத்தியர் எழுதிய வடமொழி நூல் #ஆதித்ய_ஹிருதயம். #அத்வைத நூல்கள் பல எழுதிய சான்றோர் #சங்கரர் தென்னிந்தியர். #விசிஷ்டாத்வைத விளக்கம் எழுதிய சான்றோர் #இராமாநுசர் காஞ்சிபுரப் பகுதியைச் சார்ந்த தமிழர். பரத நாட்டியம் பற்றியும் கர்நாடக சங்கீதம் பற்றியும், சமையல் முதலியன பற்றியும் உள்ள வடமொழி நூல்கள் பல, தமிழ்நாட்டுக் கலைகளையும் வாழ்க்கை முறைகளையும் ஆராய்ந்த அறிஞர்கள் எழுதியவை தான்...!


நண்பர் : தமிழர்களின்  வரலாற்றில் சமஸ்கிருதம் இருந்ததா? ஆம் எனில் எப்போதில் இருந்து?

இந்துவன் : தொல்காப்பியர் காலத்திலேயே வடசொல் தமிழில் பெற்றிருந்த செல்வாக்கைக் காட்டுகிறது. வடசொற்களைத் தமிழில் எடுத்தெழுதுவது பற்றி எழுதுகையில்.

வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே
(தொல். சொல். 395)

சிதைந்தன வரினும் இயைந்தன வரையார்
(தொல். சொல். 396)

என்று விளக்குகிறார். எனில் தொல்காப்பியர் காலத்திற்கு முன்பிருந்தே வடமொழி தமிழர்களுடன்  இருந்தது என்பதை அறியலாம்.

நண்பர் : ஏன் வடமொழியை தமிழ் புலவர்களில் ஒருவரும் போற்றவில்லை? அதாவது ஏன் முக்கியத்துவம் தரவில்லை?

இந்துவன்: உங்கள் கண்ணுக்கு அப்படி தெரிவதால் அது உண்மை ஆகிவிடுமா? தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடிய #சுந்தரம்_பிள்ளை  அவர்கள் வடமொழி பற்றி கூறியதாவது,

"வடமொழி தென்மொழியெனவே வந்த இருவிழி" என்று வாழ்த்துகிறார். "வடமொழியும் நமது நாட்டுமொழி தென்மொழியும் நமது மொழிகளே என்பது என் கருத்து’ என்கிறார் திரு.வி.க.

"அவிழ்க்கின்றவாறும் அதுகட்டுமாறும்
சிமிட்டலைப் பட்டுயிர் போகின்றவாறும்
#தமிழ்ச்சொல் #வடசொல் எனும் இவ்விரண்டும்
உணர்த்தும் அவனை உணரலும் ஆமே"  

‌என்கிறார் ஆசான் திருமூலர்...!

"மைம்மலர்க்கோதை மார்பினரெனவு மலைமகளவளொடு மருவினரெனவும்
செம்மலர்ப்பிறையுஞ் சிறையணிபுனலுஞ் சென்னிமேலுடையரெஞ்சென்னிமேலுறைவார்
தம்மலரடியொன் றடியவர்பரவத் தமிழ்ச்சொலும்
வடசொலுந் தாணிழற்சேர
அம்மலர்க்கொன்றை யணிந்தவெம்மடிக ளச்சிறுபாக்கம தாட்சிகொண்டாரே"
என்கிறார் திருஞானசம்பநத்ர்.

நண்பர் : ஆசான் #திருமூலர் ஆரிய பார்ப்பானை கோயிலுக்கு வந்து பூஜை செய்யக்கூடாது என்கிறார் ஏன்?

இந்துவன் : அதாவது அதன் பொருள் தன்னை பிறப்பால் மட்டும் பார்ப்பான் என்று அழைப்பவனை. அதாவது வேதம் அறியாது பிரம்மம் அறியாது தன்னை பிறப்பின் அடிப்படையில் பார்ப்பான் என கூறி பூஜை செய்பவன் சிவன் கோயலில் வந்து பூஜை செய்யக்கூடாது என்கிறார். நீங்கள் தவறாக புரிந்துள்ளீர்கள்...!

அதாவது ஆசான் திருமூலர் இங்கு அந்தணர்களின் ஒழுக்கம் பற்றி பேசுகிறாரே அன்றி ஆரிய பார்ப்பானை அல்ல😂👇👇👇


நண்பர் : கடவுள் சிலைகளை செதுக்கும் சிற்பிக்கு அந்த சிலையை தொடுவதற்கு ஏன் அனுமதி இல்லை? அவன் ஏன் பூநூல் அணிவதில்லை?

இந்துவன் : சிற்பியின் இலக்கணம் அதாவது ஒரு சிற்பி எவ்வாறு இருக்கவேண்டும் என்று சிற்பநூல் இலக்கணம் வகுத்துள்ளது எனில்,

"ஸ்தபதீநாம் சதுர்வேத தஸ; கர்மா விதியதே| ஸிகாயஜ்  ஞோபவீ தஞ்ச ஜபமாலா கமண்டலும் || கூர்மபீட: ஸிரச்சக்கரம் யோக வேஷ்டிர லங்கர் தம்| பீதவஸ்த்ரஸித  ப்ரஷ்டம் விபூதிர்க் கந்தலேபநம் || ஸிவிவமந்த்ரம் ஸிவத்யாநம் ஸிவபூஜா  விதீயதே |  ப்ரஹ்மா விஷ்ணு மஹேஸாநாம் ஹ்ருத யேத்யாந ஸில்பிநாம்."

அதாவது எவனொருவன் நான்கு வேதங்களையும் அறிந்தவனாயும் ; மரம், செங்கல், கருங்கல், உலோகம், சாந்து , மண், சுக்கான்கல், தந்தம் முதலியனவற்றில் உருவங்களை அமைக்கும் ஆற்றல் வாய்ந்தவானாயும் ; இயந்திரம், படம் முதலியன எழுதும் திறமை வாய்ந்தவனாயும் ; தலையிற் சிகையை உடையவனாயும் ; பூணூலைத் தரித்தவனாயும் ; பீதாம்பரம் அணிந்தவனயும் ; விபூதியையும் வாசனைச் சந்தனத்தையும் அணிந்தவனாயும்   மிருத்தலோடு, சிவபூசை செய்பவனாய், பிரம்மா விஷ்ணு மகேசுரரை இருதயத்தில்  தியானிப்பவனாய்  இருக்கின்றானோ அவனே சிற்பியாவான் என்பது இதன் பொருளாகும்.

நண்பர் : சூத்திரன் என்பது இழிவான சொல் தானே? நாம் அனைவரும் சூத்திரர்கள் தானே?

இந்துவன் : அதாவது நீங்கள் மேலே கேட்ட கேள்விக்கு பதிலாக நான் கூறிய சிற்ப சாஸ்திரத்தின் அடிப்படையில் சூத்திரனான சிற்பி நான்கு வேதங்களை கற்று, குடுமி வச்சி, பூநூல் அணிந்து பட்டு பீதாம்பரம் கொண்டு சமூகத்தில் மிக உயர்ந்த நிலையில் இருந்துள்ளான் என்பதுதானே  பொருள்?

உதாரணமாக பெரியபுராணம் பாடிய சேக்கிழார் பெருமான் அதில் வரும் வாயிலார் புராணத்தில்,
"தொன்மை நீடிய சூத்திரத் தொல்குலம்" என்றும்,  இளையான்குடி மாற நாயனார் புராணத்தில்.
"வாய்மையில் நீடு சூத்திர நற்குலம்" என்றும் இரு நாயன்மார்களின் குணங்களை உயர் பதத்தில் தான் எழுதி இருப்பதை வைத்து சூத்திரன் என்ற சொல் வரலாற்றில் இழிநிலையில் பயன்படுத்தப்படவில்லை என்பதுதானே பொருள்?

நண்பர் : சமஸ்கிருதம் செத்த மொழிதானே? வழக்கொளிந்த மொழியை இன்னும் ஏன் தூக்கி பிடிக்கிறீங்க?

இந்துவன் : ஒருவேளை சமஸ்கிருதம் செத்த மொழி எனில் நான் கீழே குறிப்பிடும் சம்பவத்திற்கு என்ன சமாதானம் சொல்வீர்கள்???

இன்று நாம்மால் பரவலாக அறியப்படும் பெயர்களான  மு. கருணாநிதி, மு.க. ஸ்டாலின், தயாநிதிமாறன், கலாநிதிமாறன், டி.ஆர். பாலு, சுப்புலட்சுமி, ஜெகதீசன், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், என்.கே.கே.பி.ராஜா, கீதா ஜீவன், சுரேஷ் ராஜன், ஜெகத்ரட்சகன், ஜெ. ஜெயலலிதா, சசிகலா நடராஜன், டி.டி.வி. தினகரன், இ. மதுசூதனன், டி. ஜெயகுமார், வா. மைத்ரேயன், விசாலாட்சி நெடுஞ்செழியன், மருத்துவர் ராமதாஸ், ஜி.கே. வாசன், எம். கிருஷ்ணசாமி, ப. சிதம்பரம், டி. சுதர்சனம், சி. ஞானசேகரன், டி.யசோதா, ஜே. ஹேமச்சந்திரன், வை. சிவ புண்ணியம், என். வரதராஜன், டி.கே. ரங்கராஜன், விஜயகாந்த், பண்ருட்டி எஸ். ரமச்சந்திரன், சொ.மு. வசந்தன், எல். கணேசன், செஞ்சி ந. ராமச்சந்திரன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் கார்த்திக், பிரபு, அஜித், சரத்குமார், மாதவன், சூர்யா, விக்ரம், சத்தியராஜ், பார்த்திபன், பிரசாந்த், விவேக், ஜனகராஜ், ராதாரவி, அர்ஜுன், பிரகாஷ் ராஜ், பாரதிராஜா, பாலுமகேந்திரா, பாலச்சந்தர் மணிரத்னம், கே. பாக்யராஜ், எஸ்.பி. முத்துராமன், கே.எஸ் ரவிக்குமார், எம்.எஸ். விசுவநாதன். தேவா இளையராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், வாலி, பாலகுமாரன், இந்திரா செளந்தரராஜன், பா. விஜய் போன்ற பெயர்கள் சமஸ்கிருத தொடர்புடனேயே இருக்கும்போது  அது எப்படி செத்த மொழி ஆகும்?

அரசியல், திரைப்படம், இசை இலக்கியம் என்று எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும் சமஸ்க்ருதப் பெயர் இல்லாத துறைகள் எதாவது உள்ளதா?தமிழகமெங்கும் விரவிக்கிடக்கும் ஊர்ப் பெயர்களிலும் சம்ஸ்க்ருதம் இருக்கிறது. ஆனால் அவை சமஸ்க்ருத பெயர்கள் என்பதுதான் உணரப்படவில்லை. உங்கள் கவனத்திற்காக இதோ அந்தப் பட்டியல்,

கோபாலபுரமும், கபிஸ்தலமும்
திரிசூலம், மகாபலிபுரம், ஸ்ரீ பெரும்புதூர், காஞ்சிபுரம், விருத்தாசலம், சிதம்பரம், வைத்தீஸ்வரன் கோவில், கும்பகோணம், ஜெயங்கொண்டான், கங்கை கொண்ட சோழபுரம், சுவாமிமலை, வேதாரண்யம், மகாதானபுரம், கோவிந்தபுரம், ஸ்ரீ ரங்கம், தர்மபுரி, மகேந்திரமங்கலம், அம்பாசமுத்திரம், ராமகிரி, கிருஷ்ணாபுரம், தென்காசி, சதுர்வேதமங்கலம், திரிபுவனம், ஸ்ரீ வைகுண்டம், ராமேஸ்வரம், ராமநாதபுரம், கன்னியாகுமரி, வாணசமுத்திரம், தனுஷ்கோடி, அனுமந்தபுரம், வாலிகண்டபுரம், ராஜபாளையாம், ஸ்ரீ வில்லிபுத்தூர், குலசேகரபட்டினம், உத்தமதானபுரம், சிவகாசி, பாபநாசம், ஸ்ரீ நிவாசநல்லூர், பசுமலை, பட்சிதீர்த்தம், சுந்தரபாண்டியபுரம், சுவேதகிரி, .. இதுமட்டுமா? முதன்மையான தமிழ் நாளிதழ்களின் பெயர்களிலும் சம்ஸ்க்ருதம் இருக்கிறது? தினமணி, தினமலர், தினத்தந்தி, தினகரன் ஆகியவை முதன்மையான தமிழ் நாளிதழ்கள், தினம் என்பது சமஸ்க்ருதச் சொல் தான் எனில் சமஸ்கிருதம் எப்படி செத்த மொழி ஆகும்?

நண்பர் : சமஸ்கிருதம் பிராமணர்களுடைய மொழி அல்லவா? 

இந்துவன் :  கர்நாடகத்தில் பிராமணரல்லாதோர் நடத்தும் சமஸ்க்ருதப் பள்ளிகள் 30 உள்ளன. தமிழகத்தில் 2006 ஆம் ஆண்டு பிளஸ்2 தேர்வில்
சம்ஸ்க்ருத மொழிப் பிரிவில் செல்வி முஸிபிரா மைமூன் என்ற இஸ்லாமிய பெண் 200 க்கு 198 மதிப்பெண் பெற்றார்.

கௌரிசங்கர் என்ற தொழிலாளி சென்னைப் பல்கலைக் கழகத்தில் சம்ஸ்க்ருத முனைவர் பட்டத்திற்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறார். இவர் பிராமணரல்லாத வகுப்பைச் சேர்ந்தவர்.
வங்கதேசத்தைச் சேர்ந்த லுப்னா மரியம் என்ற எழுத்தாளர் சம்ஸ்க்ருதம் படிப்பதற்காக இந்தியா வந்திருக்கிறார். இவருடைய மார்க்கம் இஸ்லாம்.

’ஏசு காவியம்’ என்ற சம்ஸ்க்ருத நூலை எழுதிய பாதிரியார் ஒருவர் அதற்காக சாகித்ய அகாதமி விருதைப் பெற்றிருக்கிறார். சென்ற வருடம் சென்னையில் நடந்த வால்மீகி ராமாயணம் வினாடி-வினா நிகழ்ச்சியில் ஸ்டெல்லா மேரி கல்லூரி மாணவிகள் முதல் பரிசு பெற்றனர். மின்னநூருதின் என்ற இஸ்லாமிய அறிஞர் ஆதிசங்கரரின் ஆன்ம போதத்தை தமிழ் செய்யுளாக எழுதியுள்ளார். அந்த நூலை ரமண பகவானுக்கு அவர் சமர்ப்பணம் செய்ததாக ரமணரின் வரலாற்றில் சொல்லப்படுகிறது.

உபநிடதங்களை மேற்கத்திய நாடுகளுக்கு அறிமுகப்படுத்திய சுவாமி விவேகானந்தர் பிராமணரில்லை.இதிகாச தலைவர்களான ராமனும், கிருஷ்ணனும் பிராமணர்கள் இல்லை. ராமன் க்ஷத்திரியன், கிருஷ்ணன் யாதவன். வேதங்களைத் தொகுத்துக் கொடுத்த மகரிஷி வியாசர் பிராமணர் அல்லர். தெய்வீக அருள் பெற்ற கவிஞர்களான வால்மீகியும் காளிதாசனும் பிராமணர்கள் அல்ல.

இத்தாலியைச் சேர்ந்த அறிஞர் ஒருவர் வால்மீகி ராமாயணப் பதிப்பிற்காக 30 வருடங்கள் உழைத்திருக்கிறார். ஜெர்மன் அறிஞர்கள் மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்களும் சம்ஸ்க்ருதத்துறையில் அளித்த உழைப்பை மறக்க முடியாது. இவர்கள் யாவரும் பிராமணர்கள் அல்ல.

சீனாவின் ஷங்காய் நகரில் காளிதாசருக்கு சிலை வைக்கப்பட்டிருக்கிறது. அங்கே இருப்பவர்கள் பிராமணர்கள் அல்ல. பிராமணரல்லாத சம்ஸ்க்ருத அறிஞர் ஒருவரைப் பற்றிக் கட்டாயம் சொல்ல வேண்டும்; அவர் அம்பேத்கர். இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்காகக் கூடிய அவையில் 10.09.1949 அன்று டாக்டர் அம்பேத்கர் தீர்மானமொன்றைக் கொண்டுவந்தார். டாக்டர் பி.வி. கேஸ்கர் மற்றும் நஸிமத்தீன் அஹ்மத் ஆகிய உறுப்பினர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்தனர்.

சமஸ்க்ருதத்தை இந்தியாவின் ஆட்சி மொழியாக ஆக்க வேண்டும் என்பதுதான் அந்தத் தீர்மானம். அரசியல் காரணங்களுக்குகாக அம்பேத்கரின் தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
சோஷலிஸ்ட் தலைவரான ராம் மனோகர் லோகியாவும் சம்ஸ்க்ருத ஆதரவாளர்தான். இவரும் பிராமணரல்ல. ‘உலகிலேயே புராண இதிகாசச் செழிப்புமிக்க நாடு இந்தியாதான். இந்தியாவின் மகத்தான இதிகாசங்களும் புராணங்களும் நூற்றாண்டுகளாக இந்திய மக்களின் உள்ளங்களில் அறுபடாத பிடிப்பைக் கொண்டுள்ளன’ என்றார் டாக்டர் லோகியா.

மேற்கத்திய சாஸ்திரீய இசைமேதையான பீதோவன் கீதையின் இரண்டாவது அத்தியாயத்தின் சாராம்சத்தை தமது கைப்பட எழுதி தம் மேஜையின் மேல் வைத்திருந்தாரம். இவர் பிராமணரல்ல. உண்மை இப்படி இருக்க எப்படி சமஸ்கிருதத்தை எப்படி பிராமணர்களின் மொழி என்கிறீர்கள்?

தொடரும் : 🧘🚶🚶🚶

(Source : எழுத்தாளர் சுப்பு அவர்கள் தமிழ் இந்து என்ற  இணையதளத்திலிருந்து  சமஸ்கிருதமும் சில கேள்விகளும் என்ற கட்டுரையிலிருந்து)

இராமர் பாலம் இருந்தது உண்மையா?

மர்பாலம் இருந்தது உண்மையா?

இராமர் பாலம் இருந்ததா? வரலாறுகள் என்ன சொல்கிறது என்பது பற்றிய வரலாற்று தொகுப்புகளை காண்போம்.....!😊

இராமர் பாலம் கட்டியது பற்றிக் கம்பராமாயணத்தில் கம்பன் சேதுபந்தனப் படலம்” என்று ஒரு படலத்தில் 72 பாடல்கள் மூலம் இராமசேது பாலம் கட்டியது பற்றி விவரிக்கிறார். இதில் முக்கியமாக  இராவணன் இறந்த பின்பு அவன் சடலத்தைக் கட்டிக்கொண்டு அழுதுகொண்டே மண்டோதரி இவ்வாறு கூறுகிறாள்...!

"என்று குரங்குகளைக் கொண்டு கடல் மேல் அணையைக் கட்டினாரோ, அன்றே எனக்குத்தெரிந்துவிட்டது, ராமன் ஒரு சாதாரண மானிடப் பிறவி அல்ல என்பது"

என்ற கம்பராமாயண வரிகள் மூலம் இராமர் பாலம் கட்டியது பற்றிய தகவல்களை அறியலாம்...!

அதோடு மகாகவி பாரதியார் 'சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்' என்றுதான் கூறியுள்ளார்.....!

மேலே கம்பர் மற்றும் பாரதியாரின் இராமர் பாலம் பற்றிய தகவல்களை பார்த்தோம். இனிமேல் இலக்கிய ஆதாரங்கள் விடுத்து வரலாற்று ஆதாரங்களை காண்போம். 

முதலாவதாக திருவாலங்காடு செப்பேடுகளில் இராம சேது பாலம் இருந்தது என்பதற்கான சான்றுகள் உள்ளது....!

அதாவது இராஜேந்திர சோழன்  ஆண்டு வந்த காலத்தில் வெளியிடப்பட்ட இந்தச் செப்பெடுகளில் அவனுடைய தந்தையான இராஜராஜ சோழன் என்னும் அருள்மொழி வர்மனைப் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன......!

அந்தக் குறிப்புகள் இராஜராஜ சோழனின் வெற்றியைத் தெரிவிக்கின்றன. அவற்றில் ஒரு இடத்தில், இராஜராஜ சோழனின் இலங்கைப் படையெடுப்பைப் பற்றிய குறிப்பு உள்ளது. அந்தப் போரில் இலங்கை அரசன் சத்யாஸ்ரயனை தோற்கடித்தான் என்பது பற்றி கூறுகிறது....!

அந்த #செப்பேடு கூறுவதாவது👇👇👇

"ராகவர்களின் நாயகன் (ராமர்) குரங்குகளின் உதவியோடு கடலில் அணையைக் கட்டி, மிகுந்த சிரமத்துடன் இலங்கை அரசனை (இராவணனை) கூரிய அம்புகளால் கொன்றான்; ஆனால், இந்த வீரத்தளபதி (அருள்மொழி வர்மன்), கப்பல்கள் மூலம் கடலைக் கடந்து இலங்கையை எரித்தானே, ராமனைக் காட்டிலும் இவனே சிறந்தவன்"

அடுத்ததாக கிருஷ்ணதேவராயரின் கல்வெட்டு ஒன்று விஜயநகரப் பேரரசு சேதுவிலிருந்து விஜயநகரம் வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிடுகிறது.....!

பராந்தக சோழரின் பத்தாம் நூற்றாண்டில் வெளியிட்ட செப்பேடுகளில் அபராஜிதவர்மன் சேதுதீர்த்திற்குச் சென்றதாகக் குறிப்பிடுகிறார்......!

உலகப் புகழ் பெற்ற இந்திய சரித்திர ஆராய்ச்சியாளர் டாக்டர் கல்யாணராமன் அவர்கள் “ஆடம்ஸ் பாலம்" தான் உண்மையில் இராமர் சேது பாலம் என்று எடுத்துக்காட்ட தொல்லியல், அறிவியல், வரைபடம் மற்றும் நூல்கள் போன்ற ஆதாரங்கள் உதவுகின்றன” என்று கூறியுள்ளார்.....!

தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலகத்தில் 1747 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட ஒரு டச்சு நிலப்படவியலாளர் தயாரித்த வரைபடங்கள் இப்பகுதியை இராமன்கோயில் என்று காட்டுகின்றன. பேச்சுத் தமிழில் இராமன்கோயில் என்ற சொல்லாட்சி பயன்படுத்தப் பட்டுள்ளது.....!

ஈரானிய அறிஞரும், வரலாற்றாய்வாளரும், காலவரிசையாளரும், மொழியறிஞரும், இந்தியவியலின் தந்தையுமான அபு ரெய்ஹன் அல் பிருணி (கி.பி. 973 – 1048) தனது குறிப்புகளில் ஆடம்ஸ் பாலம் என்ற பெயரால் முதன்முதலில் குறிப்பிட்டு இப்பாலத்தைப் பற்றி விவரித்துள்ளார்.....!

இபின் கோர்டாட்பே என்ற  ஒரு பெர்சிய புவியியல் வல்லுநர் (கி.பி. 846-847) ஆண்டுகளில் எழுதி வெளியிட்ட நூல் கிதாப் அல் மசாலிக் வால் மமாலிக் இந்நூலின் இரண்டாம் பதிப்பில்  “சேத் பந்தாய்” அல்லது கடல் பாலம் என்று இப்பாலத்தைக் குறிப்பிட்டுள்ளார்......!

அமெரிக்க விஞ்ஞானிகள் இராமர் பாலம் மனிதர்களால் உருவாக்கப்பட்டதுதான். இது  கட்டுக்கதையல்ல என்ற முடிவை வெளியிட்டு வியப்பில் ஆழ்த்தியுள்ளனர்....!

அதாவது இந்தியானா பல்கலைக்கழகம், தெற்கு ஓரிகன் பல்கலைக்கழகம் மற்றும் கொலராடோ பல்கலைக்கழகம் ஆகிய அமெரிக்கப் பல்கலைக்கழகங்களின் விஞ்ஞானிகள் ஒருங்கிணைந்து மேற்கொண்ட ஆய்வில் இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளது. இந்த ஆய்வின் முடிவை அறிய👇


அதோடு செயற்கைக்கோள் புகைப்படங்கள் மற்றும் கள ஆய்வுகள் இராமர் பாலம் மனிதர்களால் அமைக்கப்பட்ட பாலமே என்று சான்று பகர்கின்றனவாம். இம்முடிவு குறித்துச் செல்சியா ரோஸ், தெற்கு ஓரிகன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வரலாற்று அகழ்வாராய்ச்சியாளர்  கூறிய கருத்தாகும்....!

ஆக வரலாற்றின் அடிப்படையிலும் அப்பகுதியில் இராமர் பாலம் இருந்தது என்ற நம்பிக்கைகளும் மக்களுடனேயே பயணிக்கின்றன என்பதை வைத்து இராமர் பாலம் இருந்தது என்பதாக முடிவு செய்யலாம்...!

கோமியம் என்றால் மாட்டின் சிறுநீரா??? சோழர் கால மருத்துவமனைகளில் மாட்டின் சிறுநீரை பயன்படுத்தி செய்யப்பட்ட மருந்து இருந்ததா???

கோமியம் என்ற பெயரில் எந்தவிதமான அடிப்படை புரிதலும் இல்லாத விவாதங்கள் அரங்கேறி வருகின்றன. வடநாடுகளில் கோமியத்தை குடிக்கிறார்களாம். அதனால் கோரோனா சரியாகுமா என்று இஸ்லாமிய நண்பர் ஒருவர் என்னிடம் வினவியதோடு கோமியம் குடிப்பவன் சங்கி என்றும் மூடநம்பிக்கைகளின் கூடாரம்தான் இந்துமதம் என்றும் பேசினார். நான் அவருக்கு பதில் சொல்லாமல் கடந்துவந்துவிட்டேன். ஏனெனில் கோமயத்தை எப்படி குடிக்க முடியும்?? கோமயம் என்பது மாட்டின் சாணம். கோ மூத்ரம் என்பதுதான் மாட்டின் சிறுநீர். இதற்கே வித்யாசம் தெரியாமல் உருட்டிக்கொண்டிருக்கும் அந்நபர்களிடம் எனக்கு தென்பட்டது வெறும் இந்து மத வெறுப்பே என்பதால் எதை எதை எழுதக்கூடாது என்றெண்ணியுள்ளேனோ அதெல்லாம் பொது தளத்தில் எழுதும் நிலைக்கு தள்ளப்படுகிறேன்...!

பொதுவாக பசுவின் #சிறுநீர் மற்றும் சாணத்தை 'கோமூத்ரா மற்றும் கோமியம் என்ற பெயரில் அழைத்து வருகின்றனர். அதிகாலையில், வீட்டு வாசலில் சாணம் கரைத்த நீர் தெளித்து, மெழுகித் தூய்மை செய்வார்கள். இதைக் கிருமிநாசினி என்பார்கள். இது இன்றும் எங்கள் ஊர்ப்பகுதியில் வழக்கில் உள்ளது. அதோடு பசுவின் மூத்ரத்தை  வீடுகளில் தெளிப்பது இன்றைக்கும் வழக்கத்தில் இருக்கிறது. பசுஞ்சாணத்தைக் கெட்டியாகத் தட்டை வடிவில் தட்டி, காய வைத்து, வரட்டியாக்கி சமைப்பதற்கான எரிபொருளாகவும், ஹோமங்களிலும், யாகங்களில் நெருப்பை வளர்க்கப் பயன்படுத்துவது நம் முன்னோர்களின் வழக்கம்...!
பசுவின் பால், மற்றும் அதிலிருந்து தயாரிக்கப்படும் தயிர், நெய்யுடன் பசுவின்  சிறுநீர், சாணம் ஆகியவற்றைக் கலந்தே பஞ்சகாவ்யம்' என்ற மருந்து தயாரிக்கப்படுகிறது. இது மூளை தொடர்பான நோய்களுக்கு  மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. மிக முக்கியமாக இன்றும் நடைமுறையில் உள்ளது. பசுவிடம்  இருந்து உருவாகும்  ஐந்து பொருள்களால் தயாராகும் இந்த  பஞ்சகவ்யம் வாதம், பித்தம், கபம், தோல் நோய்,நீரிழிவு நோய்,சிறுநீரகப் பிரச்சினை போன்ற நோய்களைக் குணப்படுத்தவும் பயன்படுகிறது. மேலும் நினைவாற்றலை அதிகரிக்கவும் இது பயன்படுகிறது..!


சித்தர்கள் இந்த பஞ்சகவியத்தினைக் கொண்டு #பஞ்சகாவிய_கிருதம் என்ற மருத்தினைத் தயாரித்தனர். இதையே தமிழ்த்தாத்தா என்று அழைக்கப்படும் நம்மாழ்வாரும் முன்மொழிந்தார். மேலும், பசுவின் சிறுநீரைக் கொதிக்கவைத்து, அதன் நீராவியைச் சேகரித்து, அதிலிருந்தும் மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. வேதிப்பொருள்களைச் சுத்திகரிக்க பசுவின் சிறுநீர் பயன்படுத்தப்படுகிறது. இனிமாவாகவும்(Enema) பயன்படுத்தப்படுகிறது..!

பசுவின் சிறுநீரில் மருத்துவ குணங்கள் இருப்பதாக  அஷ்டாங்க ஹ்ருதயம் என்ற ஆயுர்வேத நூலில் குறிப்புகள் இருக்கின்றன.பசுவின் சிறுநீருடன் கடுக்காய் சேர்த்துத் தயாரிக்கப்படும் #கோமூத்ரா_ஹர்தகி' என்ற மருந்து வயிற்று உப்புசம், கல்லீரல் பிரச்னைகளுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இது 1000 ஆண்டுகளுக்கு முன்பு சோழர்களால் கட்டப்பட்ட இலவச மருத்துவமனைகளில் இருந்த மருந்து வகைகளில் ஒன்றாகும். கோமூத்ரம் மற்றும் கடுக்காய் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த மருந்துக்கு 1000 ஆண்டுகால வரலாறு உண்டு. இதற்கு தகுந்த கல்வெட்டு சான்றுகளே உண்டு...!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர்களில்  ஒருவர் என்ன மருந்து பயன்படுத்தி தனது கேன்சர் வியாதியை குணப்படுத்தியதாக ராஜ்யசபாவில்  சொல்கிறார் என்பதை நீங்களே கேளுங்கள்..!


ஆக இந்துக்களின் நம்பிக்கைகள் அடஙகியுள்ளது என்பதற்காக வீண் விமர்ச்சனங்களை அள்ளி வீசும் மாற்று மதத்தவர்களை காணும்போது சிரிப்புதான் வருகிறது. ஏனெனில் என்னிடம் இந்த கேள்வியை வைத்த இஸ்லாமிய நண்பருக்கு நான் ஒன்றை கூற கடமைப்பட்டுள்ளேன். இம்மண் சார்ந்த ஆயுர்வேத மருத்துவ முறைகளை விமர்ச்சிப்பீர்களேயானால் நானும் உங்களுக்கு ஒன்றை சொல்ல கடமைப்பட்டுள்ளேன். அதாவது,

மாட்டு மூத்திரத்தில் மருத்துவ பயன்கள் உள்ளது என்பதை கண்டுபிடித்து அதனுடன் கடுக்காய் சேர்த்து கோமூத்ர ஹரிதஹி என்ற பெயரில் நமது மக்களுக்கு இலவசமாக கொடுத்த நமது முப்பாட்டன் இராஜராக சோழனிடம் மாட்டு மூத்ரம் வாங்கி குடித்தவர்கள் இன்று உங்கள் வம்சாவழிகளிலும் வந்திருக்கலாம் என்பதை கூறிக்கொண்டு ஏதோ ஹதீஸாம் அதில் ஒட்டக மூத்திரத்திற்கு மருத்துவ குணம் இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்கள். இதன் உண்மைத்தன்மையை ஆய்ந்து எனக்கு விளக்கியபின் கோமூத்ரம் குடிப்பவர்களை ஏளனம் செய்யுங்கள்...!

புஹாரி 1501ஆவது ஹதீஸ்:

 அனஸ்(ரலி) அறிவித்தார். 
உரைனா எனும் கோத்திரத்தைச் சேர்ந்த சிலர் மதீனா வந்தபோது மதீனாவின் பருவநிலை ஒத்துக் கொள்ளாமல் நோயுற்றனர். எனவே ஸகாத்தாகப் பெறப்பட்ட ஒட்டகம் இருக்குமிடத்திற்குச் சென்று அதன் பாலையும் #சிறுநீரையும் குடிப்பதற்கு அவர்களை நபி(ஸல) அவர்கள் அனுமதித்தார்கள். ஆனால், அவர்கள் அங்கு சென்று ஒட்டகம் மேய்ப்பவரைக் கொலை செய்துவிட்டு ஒட்டகங்களையும் ஓட்டிச் சென்றனர். செய்தியறிந்த நபி(ஸல்) அவர்கள், அவர்களைப் பிடித்துவர ஆள் அனுப்பினார்கள். அவர்கள் பிடித்து வரப்பட்டதும் அவர்களின் கைகளையும் காகளையும் வெட்டினார்கள்; கண் (இமை)களின் ஓரங்களில் சூடிட்டார்கள்; அவர்களைக் கருங்கற்கள் நிறைந்த ஹர்ரா எனுமிடத்தில் (பற்களால்) கற்களைப் (பற்றிப்) பிடித்துக் கொண்டிருக்கும்படிவிட்டுவிட்டார்கள்.



இறுதியாக மாட்டின் சிறுநீரை நேரடியாக பயன்படுத்தவேண்டும் என்று எந்த சித்த வைத்திய குறிப்புகளிலும் இல்லை என்பதையும், இதை இதை நேரடியாக அருந்தினாலோ, பசுஞ்சாணத்தை நேரடியாக உடம்பில் பூசிக்கொண்டாலோ கோரோனா போய்விடும் என்பதெல்லாம் எந்த அடிப்படை ஆதாரமும் அற்ற  அவரவர் நம்பிக்கை சார்ந்த விசயங்களாகும். இதைச்செய்பவனே இதைப்பற்றி கவலைப்படாதபோது இதை பெரிதுபடுத்தி உங்கள் மத வெறுப்புகளை உமிழாதீர்கள் என்பதை கூறிக்கொள்கிறேன்...!


 -பா #இந்துவன்.
   20.05.2021

தமிழர்களின் பண்பாட்டில் திருமணத்தின்போது தாலி அடையாளச் சின்னமாக இருந்ததா???

பழந்தமிழர் பண்பாட்டில் திருமணத்தின்போது தாலி அணியும் வழக்கம் இருந்ததா? ஆரம்ப காலத்தில் ஆண்களும் பெண்களும் பருவம் அடைந்தபின் விலங்குகளையும் ப...