சனி, 22 மே, 2021

சதி எனும் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை அறிமுகப்படுத்தியது யார்?

நண்பர் - 1 : இந்துமதத்தில்  இருந்த "சதி" எனும் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை ஒழிக்க ராஜாராம் மோகன் ராய் பாடுபட்டார் சகோ.

நண்பர் - 2 : அப்போ ராமசாமி நாயக்கர் ஒழிச்சதா சொன்னாங்க? ஏன் ராஜாராம் மோகன் ராய் ஒழிச்ச சதியை திரும்ப ராம்சாமி நாயக்கர் ஒழிச்சார்???

நண்பர் -1 : அது வந்து😓🤔 பார்ப்பனர்கள் திரும்பவும் இந்த உடன்கட்டை ஏறும் வழக்கத்தை புகுத்தினார்கள் அதனால்தான் திரும்ப ஒழித்தார் சகோ.

நண்பர் -2 : இராஜாராம் மோகன்ராயே இந்து புராண இதிகாசங்கள் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை ஏற்கவில்லை என்று பல மேற்கோள்களை காட்டிதான் அதை எதிர்த்தார் எனும்போது பார்ப்பனர்கள் திரும்ப எப்படி புகுத்தியிருப்பார்கள்.???

நண்பர் - 1 : அது வந்து ப்ரோ இந்த ஆரியர்கள் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை தமிழர்களிடம் புகுத்தியதே தமிழர்களின் கலாச்சாரத்தை அழிக்கதான் சகோ. சதிக்கு ஆதரவாக பல சமஸ்கிருத நூல்கள் உள்ளதை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை சகோ.

நண்பர் - 2 : எனில் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை அறிமுகப்படுத்தி அதை முதன்முதலில் வழக்கமாக கொண்டிருந்தது ஆரியர்கள்தான் அல்லவா???

நண்பர் -1 : அதில் என்ன சந்தேகம் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை உருவாக்கியதே ஆரியர்கள் தான்.

நண்பர் - 2 : சரி. தமிழின் மிகப்பழமையான நூலான தொல்காப்பியத்தின் காலம் என்னவாக இருக்கும்னு நினைக்கிறீங்க???

நண்பர் - 1 : அது ஆரியர்கள் வருகைக்கு முன்பானது சகோ. ஆரியம் கலக்காத ஒரே நூல் தொல்காப்பியம் தான்.

நண்பர் - 2 : எனில் தொல்காப்பியத்தில் எப்படி உடன்கட்டை ஏறும் வழக்கம் வந்தது??? ஆரியர்கள் டைம் மெஷின் வச்சு தொல்காப்பியர் காலத்துக்கு வந்துட்டு உடன்கட்டை ஏறும் வழக்கத்தை தொல்காப்பியருக்கு சொல்லி கொடுத்துட்டு போனாங்களா???

நண்பர் - 1 : எதே 😳😳😳 தொல்காப்பியத்தில் உடன்கட்டை ஏறும் வழக்கம் இருந்ததாக குறிப்புகள் உள்ளதா??? பாத்தியா.! நீ என்னையே முட்டாளாக்க பார்க்கிறாய்? தமிழர்களுக்கும் உடன்கட்டை ஏறும் வழக்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை சகோ.

நண்பர் - 2 : ஒருவேளை தொல்காப்பியத்தில் உடன்கட்டை ஏறும் வழக்கம் இருந்தால் இந்த உடன்கட்டை ஏறும் வழக்கத்தை தமிழர்கள் தான் ஆரியர்களுக்கு கற்றுக்கொடுத்தனர் என்பதை ஒத்துப்பீங்களா???

நண்பர் -1 : இல்லாத ஒன்றை பற்றி ஏன் பேசுறீங்க சகோ? தொல்காப்பியத்தில் உடன்கட்டை ஏறும் வழக்கம் பற்றிய குறிப்புகள் இல்லை. இருந்தால் ஆதாரம் தாருங்கள்.

நண்பர் - 2 : (தொல்காப்பியம், சூத்திரம் –1025)

காதலி இழந்த தபுதார நிலையும்
காதலன் இழந்த தாபத நிலையும்
நல்லோள் கணவனொடு நனியழல் புகீஇச் சொல்லிடைஇட்ட பாலை நிலையும்"

அதாவது இங்கு தொல்காப்பியர் சொல்வது என்னவெனில் கணவனின் இறந்த உடலுடன் கூடவே எரியுண்டால் அவள் சமுதாயத்தில் முழுமையான நல்லபெண் ஆகிவிடுகிறாள். இதில், ‘நல்லோள்’ என்னும் சொல் கணவனுடன் எரிபுகும் பெண்ணைக் குறிக்கக் கையாளப்படிருக்கிறது.

நண்பர் - 2 : சகோ இருக்கீங்களா?

நண்பர் - 1 : 😷🏃🏃🏃

நண்பர் - 2 : இப்போ சொல்லுங்க சகோ சதி எனும் உடன்கட்டை ஏறும் வழக்கம் இந்துமதத்தில் இருந்ததா? இல்லை😒😒😒??? ஒருவேளை இதற்கு பதில் சொன்னால் தொல்காப்பியன் ஓர் இந்து என்பதை ஏற்க வேண்டி வரும்...!

நண்பர் - 1 : 😳😷🏃🏃🏃

வழக்கம்போல இவரும் ஓடிவிட்டார். இன்னும் கொஞ்சநேரம் இருந்திருந்தால் புறநானூறு, புறப்பொருள் வெண்பா மாலை, மணிமேகலை என்று தமிழக நிலப்பரப்பில் உடன்கட்டை ஏறும் வழக்கம் இருந்தது பற்றிய ஏராளமான தகவல்களை கொடுத்திருக்கலாம். பொதுவாக உடன்கட்டை ஏறும் வழக்கம் பாரத நிலப்பரப்பில் கட்டாயப்படுத்தப்பட்ட சட்டமில்லை என்பதற்கு உதாரணம் பாரதத்தின் மிகப் பழமையான இரு இதிகாசங்களாகும். மகாபாரதத்தில் பாண்டு இறந்த பிறகு குந்தி உயிரோடிருந்து தனது ஐந்து (கர்ணன் தவிர்த்து) புதல்வர்களை நல்முறையில் வளர்த்தியதை படித்திருப்போம். அதுபோல இராமாயணத்திலும் தசரதன் இறந்தபிறகு கைகேயி முதலான மனைவியர் தீப்புகாதிருந்ததே இதற்கு ஆகச்சிறந்த உதாரணமாகும்...!

தமிழ் இலக்கியங்களை எடுத்துக்கொண்டாலும் இது கட்டாயப் படுத்தப்பட்ட சட்டமாக இருந்ததில்லை எனவும் பெண்கள் இம்முடிவை தாமாக முன்வந்து எடுத்துள்ளனர் என்பதையும் அறியலாம். உதாரணமாக,

புறநானூறு :

"பல் சான்றீரே! பல் சான்றீரே!
‘செல்க’ எனச் செல்லாது, ‘ஒழிக’ என விலக்கும், பொல்லாச் சூழ்ச்சிப் பல் சான்றீரே! அணில்வரிக் கொடுங்காய் வாள் போழ்ந்திட்ட காழ் போல் நல் விளர் நறு நெய் தீண்டாது அடை இடைக் கிடந்த கை பிழி பிண்டம்,
வெள் எள் சாந்தொடு, புளிப்பெய்து அட்ட வேளை வெந்தை, வல்சி ஆக,
பரற்பெய் பள்ளிப்பாயின்று வதியும்
உயவற் பெண்டிரேம் அல்லேம் மாதோ; பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம் நுமக்கு அரிதாகுக தில்ல; எமக்கு எம் பெருந்தோட் கணவன் மாய்ந்தென, அரும்பு அற
வள் இதழ் அவிழ்த்த தாமரை
நள் இரும் பொய்கையும் தீயும் ஓரற்றே"

பொருள்: ‘’கணவனுடன் நீயும் போ என்று சொல்லாமல் பொல்லாத செயல் புரியும் பெரியோர்களே! கணவன் இல்லாத பெண்கள் வெள்ளரிக்காய் விதை போல, நெய் இல்லாத சோறு, எள்ளுத் துவையல், புளி கூட்டி சமைத்த வேள இலை ஆகியவற்றை உண்ண வேண்டும். பாய் இல்லாமல் வெறும் கல் தரையில் படுக்க வேண்டும். அது போன்ற பெண் என்று என்னை நினைத்து விட்டீர்களா? நான் அப்படிப்பட்டவள் அல்ல. உங்களுக்கு வேண்டுமானால் மரணப் படுக்கை கஷ்டமாக இருக்கலாம். என் கணவன் இறந்துவிட்டான். அந்த சிதைத் தீயே எனக்கு தாமரைக்குளம் போல குளிர்ச்சிதரும். இதைப் புரிந்துகொள்ளுங்கள் என்று அவையில் குழுமியிருந்த பெரியோர்களின் அறிவுரைகளை கேட்காமல் தாமாக முன்வந்து பூதப்பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு தீப்புகுகிறாள். இதிலிருந்து உடன்கட்டை ஏறும் வழக்கம் நமது தமிழ் சமூகத்தில் கட்டாயப்படுத்தப்டவில்லை என்பது தெளிவு...!

தொல்காப்பியம் முதற்கொண்டு தமிழின் மிகப்பழமையான இலக்கியங்களே உடன்கட்டை ஏறும் வழக்கத்தை முன்மொழிவதால் இது ஆரியர்கள் தமிழர்களிடம் புகுத்தியது என்றோ, பார்ப்பனர்களின் சூழ்ச்சி என்றோ சொல்வதற்கு இடமில்லை எனினும் இதுபோன்றதொரு கொடுமையான நிகழ்வை ஏற்றுதான் ஆகவேண்டுமா என்றால் நிச்சையமாக இல்லை. ஒருவேளை வள்ளுவன் கூறியதுபோல்

"தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை"

பொருள் : பிற தெய்வங்களைத் தொழாமல் கணவனையே தெய்வமாகத் தொழுது வாழும் மனைவி, பெய் என்று சொன்னால் மழை பெய்யும்.

கற்பு தவறாமல் தன் கணவனை தெய்வத்திற்கு நிகராக மதித்து வாழ்ந்த இத்தகைய மகத்துவம் வாய்ந்த பெண்கள் தன் கணவன்மீது கொண்ட அன்பால் கணவனை இழக்கும்போது துன்பம் தாங்க முடியாமல் இதுபோன்றதொரு செயலை செய்ய முற்பட்டிருப்பார்களோ? என்றால் கூட அந்நிகழ்வை நினைவுபடுத்தவே முடியவில்லை. ஏனெனில் அந்நிகழ்வு அத்தனை கொடுமையானது. நமது இந்த பாரத திருநாட்டில் குழந்தைத்திருமணம் முதற்கொண்டு இதுபோன்ற மூடப்பழக்கவழக்கங்களை காலத்திற்கு ஏற்ப மாற்றி அமைத்து தன்னைத்தானே தனது குறைகளை அகற்றி இன்று ஆலமரம்போல் வளர்ந்து நிற்கிறது இந்நாட்டின் பண்பாட்டு கலாச்சாரங்கள்...!

தீப்பாய்ந்த அம்மன், மாலையிட்ட அம்மன் என்று கணவனுடன் தீப்பாய்ந்து உயிர்நீத்த பெண்களுக்கு நடுகல் எழுப்பி வழிபடும் வழக்கமும் நம்மிடம் இருந்தது. இந்த நடுகற்களில் கணவனைப் பிரியாதாள், துணைவனைப் பிரியாதாள் என்பதுபோன்ற வசனங்கள் பொறிக்கப்பட்டிருப்பதை இன்றும் காணலாம். கணவனோடு சுமங்கலியாகச் சொர்க்கம் புகுதல் மற்றும் கற்பு நெறி தவறாத இத்தகைய பெண்களுக்கு நடுகல் எழுப்பி  தெய்வமாக  வழிபடுதல் ஆகிய நம்பிக்கைகளின்  அடிப்படையில் உடன்கட்டை ஏறும் வழக்கம் நடைமுறையில் இருந்துள்ளது எனினும் இது இன்றைய சூழலில் தேவையற்ற ஒன்றே ஆகும்...!

 -பா #இந்துவன்
  22.05.2021

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தமிழர்களின் பண்பாட்டில் திருமணத்தின்போது தாலி அடையாளச் சின்னமாக இருந்ததா???

பழந்தமிழர் பண்பாட்டில் திருமணத்தின்போது தாலி அணியும் வழக்கம் இருந்ததா? ஆரம்ப காலத்தில் ஆண்களும் பெண்களும் பருவம் அடைந்தபின் விலங்குகளையும் ப...