எனதருமை அன்பர்களே இந்து தர்மம் எங்கும் பிறப்பால் வேற்றுமையை கூறவில்லை....!
இதையே👇👇👇
பகவத்கீதை அதிகாரம் 8, சுலோகம் 29 சொல்கிறது....!👇👇👇
"ஸமோஹம் சர்வபூசேஷு நமே த்வேஷ்யோ அஸ்திநப்ரிய: |
யே பஜந்தி துமாம் பக்த்யா மயி தே தேஷு சாப்யஹம்"
அதாவது.....!
💟பலவகையாக உள்ள எல்லா உயிரினங்களிலும் நான் சமமாக இருக்கிறவன். எனக்கு யாரிடமும் வெறுப்பு இல்லை யாரிடமும் விருப்பமும் இல்லை. ஆகவே என்னை சேரத்தக்கவன் சேரதகாதவன் என்று எவருமில்லை. என்னிடம் பக்தி கொண்டு பிரியம் வைப்பவர் எவரோ என்னிடத்தில் அவரும் அவரிடத்தில் நானும் வாழ்கிறோம்💟..! என்கிறது.....!
ஆனால் பகவத்கீதையில் வரும் பிரிவுகளை குணம் மற்றும் தொழிலின் அடிப்படையில் பிரித்தேன் என்கிறார் பகவான் கிருஷ்ணர்....!
இதையே பகவத்கீதை அத்யாயம் 4 ஸ்லோகம் 13 சொல்கிறது...!👇
"சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் கு³ணகர்மவிபா⁴க³ஸ²:|
தஸ்ய கர்தாரமபி மாம் வித்³த்⁴யகர்தாரமவ்யயம்"
அதாவது....!
💟குணத்துக்கும், செய்கைக்கும் தக்கபடி நான் நான்கு வர்ணங்களைச் சமைத்தேன். செயற்கையற்றவனும் அழிவற்றவனுமாகிய யானே அவற்றைச் செய்தோனென்றுணர்💟....! என்கிறார்...!
இதையே திருவள்ளுவர்...!👇👇👇
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்" என்கிறார்...!
அதாவது பிறப்பின் அடிப்படையில் அனைவரும் சமமே...! ஆனால் அவர்களின் #தொழிலின் அடிப்படையில் #வேற்றுமை உண்டு என்கிறார்...!
மனுஸ்மிருதி கூறுகிறது:-
உபந்யாசம் முடியும்வரை பிராமணனும் சூத்திரனுக்கு நிகரானவனே என்கிறது
#மனு- அத்யாயம் 2 ஸ்லோகம் 172
"இருபிறப்பு இருபெயர் ஈரநெஞ்சத்து ஒருபெயர்
அந்தணர் அறன் அமர்ந்தோயே" #பரிபாடல்
அதாவது உபநயனத்துக்கு முன்பு ஒரு பிறப்பும் பின்பு ஒருபிறப்புமாகிய இரண்டு பிறப்பினையும்;
அப் பிறப்பாலே வந்த இரண்டு பெயரினையும், அருளுடைய நெஞ்சத்தினையும் ஒப்பற்ற
புகழினையும் உடைய அந்தணரது வைதிக
அறத்தைப் பொருந்தியவனே என்று இக்கூற்றை சங்க இலக்கியம் ஊர்ஜிதம் செய்கிறது....!
மஹா பாரதத்தில் யுதிஷ்டிரன் அசரீரியின் கேள்விக்கு பதில் கூறுகிறான்......!👇👇👇
“பிறப்பாலோ, கல்வியாலோ ஒருவன் பிராமணன் ஆக முடியாது. உயர் குலத்தில் பிறந்தோனும் ஒழுக்கம் இல்லையேல் கீழானவனே. ஒழுக்கத்தால் மட்டுமே ஒருவன் பிராமணனாக முடியும் என்கிறார்....!
“கீழ்க் குலத்தை சார்ந்தவனும் உயர் பண்புகளால் மேலான வர்ணத்தை அடைகிறான்,” – ஆபஸ்தம்ப சூத்ரம் (2-5-10-11).
இதையே திருவள்ளுவர்👇👇👇
"மேற்பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு" என்கிறார்.....!
கோத்திரங்களை தொடங்கிய எந்த ரிஷியுமே பிறப்பால் பிராமணர் அல்ல. மீனவ இனத்தில் பிறந்தவர் வியாசர். நாகர் இனத்தில் பிறந்தவரே ஷ்ருவா ரிஷியும். வசிஷ்டரும் ஜரத்கார மஹரிஷியும் கலப்புத் திருமணம் புரிந்தோரே. மஹரிஷி ஆச்சார்ய கௌதமர், சத்யகாம ஜாபாலா என்போரை பிராமணராகவே ஏற்றார்.....!
சடங்குகள் செய்வதால் மட்டுமே ஒருவன் பிராமணன் என்றால் அதுவும் தவறானது. சடங்குகள் எல்லா மதங்களிலும் உள்ளன. எல்லா குலத்தோரும் சடங்குகள் செய்கின்றனர்.....!
கல்வியால் ஒருவன் பிராமணன்-அந்தணன் என்றால் அதுவும் தவறானதே. கல்வி பயின்று ஒருவன் ஒழுக்கமுடையவனாகவோ அருளாளனாகவோ இருப்பான் என்பது நிச்சயமில்லை. ஆகவே ஒழுக்கத்தால் மட்டுமே ஒருவன் அந்தணன் ஆக முடியும்......!
வள்ளுவர் கூறுகிறார்:-
அந்தணர் என்போர் அறவோர் மற்றும்
எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகலான்....!
ஆர்ய சமாஜ நிறுவனர் மகரிஷி தயானந்த சரஸ்வதி அவர்கள் ஜாதி, மத, பேதமின்றி ஆர்வமுள்ள அனைவருக்கும் பூணூல் அணிவித்து, வேதோபதேசம் செய்து பிராமணராக்கினார்....!
ரிக் வேதம் கூறுகிறது:-
"இந்த்ரம் வர்தந்தோ அப்துர: க்ருண்வந்தோ விஷ்வம் ஆர்யம்" #ரிக் (9-63-5)
“உலக மாந்தர் அனைவரையும் நல்வழிப் படுத்தி அந்தணர்களாக ஆக்குவீராக.”
வேத,புராணங்களில் வர்ணத்தின் அடிப்படையில் வேத கல்வி அளிக்கப்படவில்லை !
இதற்கு ஸ்ரீ பாதராயணர் - சாந்தியோக்கிய உபநிஷத்தில் - 4:4 to 9 இல் சத்யகாமனின் வரலாறு மூலம் விளக்குகிறார்.....!
கெளதம முனிவர் ஒரு சூத்திரனான - சாத்யகாமனுக்கு வேதம் சொல்லி கொடுப்பதாகவும். இதை படிக்க வர்ணங்கள் முக்கியமில்லை என கூறுகிறார் ! பின் அவனை சீடனாக ஏற்றுக்கொண்டு அவனுக்கு வேத அறிவை சொல்லிக்கொடுத்து பிராமணனாக ஆகுகிறார்....!
ஆனால் நம் முன்னோர்கள் வேதத்தை போற்றி புகழ்ந்தே வந்துள்ளனர். அவற்றில் அவசியமற்ற பல இடைச்செருகல்கள் உள்ளது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதோடு இன்று நமது கைகளில் சுழலும் மனுதர்மம் கூட இடைச்செருகல்களின் குவியலே....!
"வேதத்தை விட்ட அறமில்லை; வேதத்தின்
ஓதத்தகும் அறம் எலாம் உள தர்க்க
வாதத்தை விட்டு மதிஞர் வளமுற்ற
வேதத்தை ஓதியே வீடு பெற்றார்களே" #திருமூலர்_திருமந்திரம்
"காயத்திரியே கருது சாவித்திரி
ஆய்வதற்கு உவப்பர் மந்திரம் ஆங்கு உன்னி
நேயத்தேர் ஏறி நினைவுற்று நேயத்தாய்
மாயத்துள் தோயா மறையோர்கள் தாமே" #திருமூலர்_திருமந்திரம்
ஆனால் பிறப்பால் மனிதர்கள் எவருமே பிராமணன் ஆகமுடியாது என்றும் அவ்வாறு ஞான மார்க்கத்தில் முற்றுப்பெறாமல் தன்னைப் பிராமணன் என அழைப்பவனை மூடப் பார்ப்பான் என்கிறார் முற்றுப்பெற்ற சித்தபெருமான் #திருமூலர்.....!
"பேர் கொண்ட பார்ப்பான் பிரான் தன்னை அர்ச்சித்தால்
போர் கொண்ட நாட்டுக்குப் பொல்லா வியாதியாம்
பார் கொண்ட நாட்டுக்குப் பஞ்சமும் ஆம் என்றே
சீர் கொண்ட நந்தி தெரிந்து உரைத்தானே."
#ஆசான்_திருமூலர்
விளக்கம்:
தம் பெயரில் மட்டுமே(பிறப்பால்) பார்ப்பான் என்போர் எம்பிரானை அர்ச்சனை செய்யத் தகுதியற்றவர்கள். அப்படி அவர்கள் செய்தால் அந்த நாட்டுக்கும், அரசனுக்கும் தாங்கொணா வேதனைகளும், நாட்டு மக்களுக்கும் பொல்லாத வியாதிகளும், பஞ்சமும் வந்துசேரும் என்பதை தன்னாசானான சித்தபெருமான் நந்தீசர் உரைத்ததாகக் கூறுகிறார் ஆசான் திருமூலர்......!
இதன் மூலம் ஆசான் திருமூலர் சொல்வது பிறப்பால் பெயரால் யாரும் இறையை அர்ச்சிக்கும் தகுதியைப் பெறமாட்டார். மெய்யாக அறவழியில் நிற்கும் அனைவருக்கும் இறையை அர்ச்சிக்கும்(பூசிக்கும்) தகுதியுண்டு. அவர்களே ஈற்றில் இறையுடன் இரண்டறக் கலக்க வல்ல 'அறவாழி அந்தணர்கள்' ஆவார்கள்....!
"சத்தியம் இன்றித் தனிஞானந் தானின்றி
ஒத்த விடயம்விட் டோரும் உணர்வின்றிப்
பத்தியும் இன்றிப் பரன்உண்மை யுமின்றிப்
பித்தேறும் மூடர் பிராமணர் தாம்அன்றே. "
திருமூலர்
விளக்கம்:
சத்தியம், ஞானம், இறையுணர்வு, இறையன்பு எதுவுமே இருக்காது. ஆனால், தம்மைத் தாமே உயர்ந்த பிராமணர் என்போர் பித்தேறிய மூடரேயன்றி பிராமணராகார் என்கிறார் ஆசான் திருமூலர். இது பிறப்பில் தாமே பிராமணர் என்றும், வார்த்தையில் மட்டும் எல்லாவுயிர்களிடத்தும் அன்பு செலுத்துவதாகக் கூறிச் சகமனிதரையே தீண்டத்தகாதவர் எனக் கூறி உலகை ஏமாற்றும் பித்தேறிய மூடருக்காகக் கூறப்பட்டுள்ளது......!
சாதி, மத பேதமின்றி எல்லா உயிர்களிடத்தும் அன்பு பூண்டு, அறநெறிப்படி வாழ்ந்து, பரப்பிரம்மத்தை (இறையை) பரிபூரணமாக உணர்ந்து, அருட்பெருஞ்சோதியுடன் இரண்டறக் கலந்த அனைவரும் பிராமணர்கள்தான். அவர்களது உள்ளம்தான் எம்பெருமான் களிநடம் புரியும் உன்னத அரங்கம் என்று அருட்பெருஞ்சோதி வள்ளலார் பெருமான் பகர்ந்துள்ளார்.....!
பிறவாநெறி (சகாக்கல்வி / மரணமில்லாப் பெருவாழ்வு) அறிந்த ஆசான் திருமூலரின் குருவாகிய ஆசான் நந்தீசர் போன்ற, ஆதியாகிய இறையுடன் இரண்டறக் கலந்த ஞானிகள்/ சித்தர்களே 'அறவாழி அந்தணர்கள்' ஆவார்கள்.......!
"பிறவா நெறிதந்த பேரரு ளாளன்
மறவா அருள்தந்த மாதவன் நந்தி
அறவாழி அந்தணன் ஆதிப் பராபரன்
உறவாகி வந்தென் உளம்புகுந் தானே."
திருமூலர்
ஆக இதிலிருந்து வர்ணம் என்பது பிறப்பால் வருவது இல்லை என்பதையும். பிறப்பால் வருவது என்று தம்பட்டம் அடிப்பவர்கள் மூடர்கள் என்றும் தெளிவாகிறது....!