சனி, 22 மே, 2021

இராமர் பாலம் இருந்தது உண்மையா?

மர்பாலம் இருந்தது உண்மையா?

இராமர் பாலம் இருந்ததா? வரலாறுகள் என்ன சொல்கிறது என்பது பற்றிய வரலாற்று தொகுப்புகளை காண்போம்.....!😊

இராமர் பாலம் கட்டியது பற்றிக் கம்பராமாயணத்தில் கம்பன் சேதுபந்தனப் படலம்” என்று ஒரு படலத்தில் 72 பாடல்கள் மூலம் இராமசேது பாலம் கட்டியது பற்றி விவரிக்கிறார். இதில் முக்கியமாக  இராவணன் இறந்த பின்பு அவன் சடலத்தைக் கட்டிக்கொண்டு அழுதுகொண்டே மண்டோதரி இவ்வாறு கூறுகிறாள்...!

"என்று குரங்குகளைக் கொண்டு கடல் மேல் அணையைக் கட்டினாரோ, அன்றே எனக்குத்தெரிந்துவிட்டது, ராமன் ஒரு சாதாரண மானிடப் பிறவி அல்ல என்பது"

என்ற கம்பராமாயண வரிகள் மூலம் இராமர் பாலம் கட்டியது பற்றிய தகவல்களை அறியலாம்...!

அதோடு மகாகவி பாரதியார் 'சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்' என்றுதான் கூறியுள்ளார்.....!

மேலே கம்பர் மற்றும் பாரதியாரின் இராமர் பாலம் பற்றிய தகவல்களை பார்த்தோம். இனிமேல் இலக்கிய ஆதாரங்கள் விடுத்து வரலாற்று ஆதாரங்களை காண்போம். 

முதலாவதாக திருவாலங்காடு செப்பேடுகளில் இராம சேது பாலம் இருந்தது என்பதற்கான சான்றுகள் உள்ளது....!

அதாவது இராஜேந்திர சோழன்  ஆண்டு வந்த காலத்தில் வெளியிடப்பட்ட இந்தச் செப்பெடுகளில் அவனுடைய தந்தையான இராஜராஜ சோழன் என்னும் அருள்மொழி வர்மனைப் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன......!

அந்தக் குறிப்புகள் இராஜராஜ சோழனின் வெற்றியைத் தெரிவிக்கின்றன. அவற்றில் ஒரு இடத்தில், இராஜராஜ சோழனின் இலங்கைப் படையெடுப்பைப் பற்றிய குறிப்பு உள்ளது. அந்தப் போரில் இலங்கை அரசன் சத்யாஸ்ரயனை தோற்கடித்தான் என்பது பற்றி கூறுகிறது....!

அந்த #செப்பேடு கூறுவதாவது👇👇👇

"ராகவர்களின் நாயகன் (ராமர்) குரங்குகளின் உதவியோடு கடலில் அணையைக் கட்டி, மிகுந்த சிரமத்துடன் இலங்கை அரசனை (இராவணனை) கூரிய அம்புகளால் கொன்றான்; ஆனால், இந்த வீரத்தளபதி (அருள்மொழி வர்மன்), கப்பல்கள் மூலம் கடலைக் கடந்து இலங்கையை எரித்தானே, ராமனைக் காட்டிலும் இவனே சிறந்தவன்"

அடுத்ததாக கிருஷ்ணதேவராயரின் கல்வெட்டு ஒன்று விஜயநகரப் பேரரசு சேதுவிலிருந்து விஜயநகரம் வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிடுகிறது.....!

பராந்தக சோழரின் பத்தாம் நூற்றாண்டில் வெளியிட்ட செப்பேடுகளில் அபராஜிதவர்மன் சேதுதீர்த்திற்குச் சென்றதாகக் குறிப்பிடுகிறார்......!

உலகப் புகழ் பெற்ற இந்திய சரித்திர ஆராய்ச்சியாளர் டாக்டர் கல்யாணராமன் அவர்கள் “ஆடம்ஸ் பாலம்" தான் உண்மையில் இராமர் சேது பாலம் என்று எடுத்துக்காட்ட தொல்லியல், அறிவியல், வரைபடம் மற்றும் நூல்கள் போன்ற ஆதாரங்கள் உதவுகின்றன” என்று கூறியுள்ளார்.....!

தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலகத்தில் 1747 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட ஒரு டச்சு நிலப்படவியலாளர் தயாரித்த வரைபடங்கள் இப்பகுதியை இராமன்கோயில் என்று காட்டுகின்றன. பேச்சுத் தமிழில் இராமன்கோயில் என்ற சொல்லாட்சி பயன்படுத்தப் பட்டுள்ளது.....!

ஈரானிய அறிஞரும், வரலாற்றாய்வாளரும், காலவரிசையாளரும், மொழியறிஞரும், இந்தியவியலின் தந்தையுமான அபு ரெய்ஹன் அல் பிருணி (கி.பி. 973 – 1048) தனது குறிப்புகளில் ஆடம்ஸ் பாலம் என்ற பெயரால் முதன்முதலில் குறிப்பிட்டு இப்பாலத்தைப் பற்றி விவரித்துள்ளார்.....!

இபின் கோர்டாட்பே என்ற  ஒரு பெர்சிய புவியியல் வல்லுநர் (கி.பி. 846-847) ஆண்டுகளில் எழுதி வெளியிட்ட நூல் கிதாப் அல் மசாலிக் வால் மமாலிக் இந்நூலின் இரண்டாம் பதிப்பில்  “சேத் பந்தாய்” அல்லது கடல் பாலம் என்று இப்பாலத்தைக் குறிப்பிட்டுள்ளார்......!

அமெரிக்க விஞ்ஞானிகள் இராமர் பாலம் மனிதர்களால் உருவாக்கப்பட்டதுதான். இது  கட்டுக்கதையல்ல என்ற முடிவை வெளியிட்டு வியப்பில் ஆழ்த்தியுள்ளனர்....!

அதாவது இந்தியானா பல்கலைக்கழகம், தெற்கு ஓரிகன் பல்கலைக்கழகம் மற்றும் கொலராடோ பல்கலைக்கழகம் ஆகிய அமெரிக்கப் பல்கலைக்கழகங்களின் விஞ்ஞானிகள் ஒருங்கிணைந்து மேற்கொண்ட ஆய்வில் இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளது. இந்த ஆய்வின் முடிவை அறிய👇


அதோடு செயற்கைக்கோள் புகைப்படங்கள் மற்றும் கள ஆய்வுகள் இராமர் பாலம் மனிதர்களால் அமைக்கப்பட்ட பாலமே என்று சான்று பகர்கின்றனவாம். இம்முடிவு குறித்துச் செல்சியா ரோஸ், தெற்கு ஓரிகன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வரலாற்று அகழ்வாராய்ச்சியாளர்  கூறிய கருத்தாகும்....!

ஆக வரலாற்றின் அடிப்படையிலும் அப்பகுதியில் இராமர் பாலம் இருந்தது என்ற நம்பிக்கைகளும் மக்களுடனேயே பயணிக்கின்றன என்பதை வைத்து இராமர் பாலம் இருந்தது என்பதாக முடிவு செய்யலாம்...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தமிழர்களின் பண்பாட்டில் திருமணத்தின்போது தாலி அடையாளச் சின்னமாக இருந்ததா???

பழந்தமிழர் பண்பாட்டில் திருமணத்தின்போது தாலி அணியும் வழக்கம் இருந்ததா? ஆரம்ப காலத்தில் ஆண்களும் பெண்களும் பருவம் அடைந்தபின் விலங்குகளையும் ப...