வெள்ளி, 18 செப்டம்பர், 2020

சிலப்பதிகாரமும் மகாபாரதமும்

காப்பியங்களுள் முதன்மையான சிலப்பதிகாரம் பாரதத்தின் இரு பெரும் இதிகாசங்களுள் ஒன்றான மகாபாரத நிகழ்வவுகள் பலவற்றைச் சுட்டுகிறது.....!
ஆம், கிபி இரண்டாம் நூற்றாண்டில் இளங்கோவடிகளால் எழுதப்பட்ட சிலப்பதிகாரத்தின் மதுரைக்காண்டம் ஆய்ச்சியர் குரவையில் இரு இடங்களில் இந்நிகழ்வை அதாவது "கண்ணன் பாண்டவர்களுக்காக அஸ்தினாபுரத்திற்கு தூது" சென்ற நிகழ்வை சுட்டுகிறது.....!

முன்னிலைப்பரவல்:

"திரண்டமரர் தொழுதேத்தும் திருமால்நின் செங்கமல
இரண்டடியான் மூவுலகும் இருள்தீர நடந்தனையே
நடந்தஅடி பஞ்சவர்க்குத் தூதாக நடந்தஅடி
மடங்கலாய் மாறட்டாய் மாயமோ மருட்கைத்தே"

படர்க்கைப் பரவல்:

"மடந்தாழு நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
கடந்தானை நூற்றுவர்பால் நாற்றிசையும் போற்றப்
படர்ந்தா ரணமுழங்கப் பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே
நாராயணா வென்னா நாவென்ன நாவே"

இதுமட்டுமல்லாது அர்ச்சுனன் காண்டவ வனத்தை அழித்த நிகழ்வும், மகாபாரதப்போர் 18 நாட்கள் நடந்தது என்ற செய்தியையும், சேர அரசன் இரு படைகளுக்கும் உணவளித்த நிகழ்வையும், கண்ணன் சூரியனை தனது சுதர்சனத்தால் மறைத்த நிகழ்வையும் சுட்டுகிறது. இது தவிர்த்து இராமாயண நிகழ்வுகளையும் சிலப்பதிகாரம் சுட்டுகிறது என்பது கூடுதல் தகவல்....!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தமிழர்களின் பண்பாட்டில் திருமணத்தின்போது தாலி அடையாளச் சின்னமாக இருந்ததா???

பழந்தமிழர் பண்பாட்டில் திருமணத்தின்போது தாலி அணியும் வழக்கம் இருந்ததா? ஆரம்ப காலத்தில் ஆண்களும் பெண்களும் பருவம் அடைந்தபின் விலங்குகளையும் ப...